There were 1,871 press releases posted in the last 24 hours and 398,228 in the last 365 days.

உலகளாவிய முள்ளிவாய்க்கால் இணையவழிக் நினைவேந்தல் கூட்டம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மே18: (US) New York : 8:00am / UK 1:00 pm / Europe 2:00pm / Sri lanka - India 5:30pm - To Watch: http://tgte.tv/, https://www.facebook.com/tgteofficial

NEW YORK, USA, May 18, 2020 /EINPresswire.com/ -- உலகத்தமிழர்களின் மனங்களில் ஆறாப்பெருந்துயராக அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 11வது ஆண்டு நிகழ்வினை நினைவேந்தும் வகையில், உலகத்தமிழ் பெருமக்கள் பலரும் பங்கெடுக்கும் வகையில் இணையவழியிலான உலகத் தமிழர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டமொன்றினை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் உரையுடன் தொடங்குகின்ற
இப்பெரும்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அந்நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என்;று பலரும் நமக்கான நீதியின் தேடலுக்கு தமது தோழமையினை தெரிவிக்க முன்வந்திருப்பது நமக்கான பலத்தினைக் கூட்டியுள்ளது.

** மலேசியா : பினாங்கு மாநில துணை முதல்வர் பேரா.இராமசாமி

** இந்தியா : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவருமாகிய தொல்.திருமாவளவன், Sdpi கட்சி தெக்லான் பார்கவி, தமிழர் தேசிய இயக்கம் தோழர் தியாகு, எழுத்தாளர் பாமரன், ஊடகர் விஸ்வா

* கனடா : Hon Gary Anandasangaree, (MP Scarborough-Rouge Park ),Hon Patrick Brown (Mayor of Brampton) ,Hon Neethan Shan ( Executive Director, Urban Alliance, Mayor john Tory (Ontario) , Dr Anu Sriskandarajah

* பிரித்தானியா : Hon. Elliot Colburn (Conservative Member of Parliament for Carshalton & Wallington, All Party Parliamentary Group for Tamils) , Hon Siobhain Mcdonagh MP (Mitcham and Morden), Hon Gareth Thomas Mp(Harrow), Hon Edward Davey (Kingston and Surbiton
Acting leader of Liberal Democrats), Hon Graham Willianson (UK - Nation with out States)

* சுவிஸ் : Hon Anna Anno (Humain Rights Activist, Eelam council président)

* பிரான்ஸ் : Hon Francois puponi (Député ) , Hon Clementine Autin (Deputé) , Mme Marie-George Buffet (Député)

* இப்பெருமக்களுடன் பாலா மாஸ்ரர் (பொருளியில் ஆய்வாளர்) , முள்ளிவாய்க்கால் சாட்சியமாக மருத்துவர் வரதராஜன், காவல்துறை றஞ்சித், மருத்துவர் வண்ணன் , இளங்கீரன் (காவல்துறை ஆய்வாளர்), ரவி சுப்ரமணியம் (அமெரிக்கா - உலகத்தமிழர் இயக்கம், சசி (ஜேர்மனி) தாயக நண்பர்கள் வட்டம், இஜேந்திரா (இலங்கைத் தமிழ் சங்கம் - அமெரிக்கா) , சுந்தரவேல் (புனவர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்), இரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவை), சங்கீதன் ( வரலாற்று மையம் - பிரித்தானியா), சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் (சைவநெறிக்கூடம் - இணைப்பாளர் சுவிஸ்), காந்தா படையாச்சி ( தென்னாபிரிக்கா), அஜெந்தன் ( ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் -பிரான்ஸ்) உட்பட இவர்களுடன் கலைஞர்கள், கவிஞர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.

** மே18ம் நாள் திங்கட்கிழமை நேரம் (US) New York : 8:00am / UK 1:00 pm / Europe 2:00pm / Sri lanka - India 5:30pm தொடங்குகின்ற இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் அனைவரும் இந்த இணையதளம் http://tgte.tv/ , சமூகவலைத்தளம் https://www.facebook.com/tgteofficial மூலமும், தமிழ் ஊடகப்பரப்பிலும் காணலாம் **

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாக நினைவேந்துவோம்.

** மே 18ம் நாள் திங்கட்கிழமை எமது வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலை குடும்பமாக நினைவேந்திக் கொள்வோம்.

** இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.

** 'இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்' என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை நினைவிற் கொள்ளும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சியினை' குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றைய தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter